வியாழன், 17 அக்டோபர், 2013

பூ வாசம் வீசுமோ ,,,,,,,,,,,,

பூ வாசம் வீசுமோ பூ ஒன்று பேசுமோ 
இமை கொஞ்சம் மூடாமல் கனவொன்று தோன்றுமோ 
பூவோடு பேசாமல் தென்றலும் ஓயுமோ 
உன் இதயம் சேராமல் என் ஜீவன் போகுமோ 

இந்த காதல் நீ தந்தது 
எந்தன் சோகம் நீ தந்தது 
நீ  இன்றி நான் இல்லையே 
மௌனம் கடந்த பின்னும் 
கண்ணீர் கரைந்த பின்னும் 
நீ கொஞ்சம் இரங்கவில்லையே 
என் இதயம் துடிக்க வில்லை 
என் தனிமை தொலைய வில்லை 
உயிரிலும் உணர்வில்லையே 

மௌனத்தில அழும்போது வார்த்தைகள் வருவதில்லை 
நீ கொஞ்சம் பேசும்போது வழி கொஞ்சம் தெரிவதில்லை 
நியமாக நீ இல்லையே 
உன் கோபத்தில் பாசம் இல்லையே 

உன் முகத்தில் தோன்றிய முகப்பரு நான் பார்த்து 
பூவில் குடியிருக்கும் பனித்துளி போல எண்ணி 
அந்த வழி கூட உன் மேனி தங்காது என்றெண்ணி
 துயரத்தில் நான் தவித்தேனே 
என் மனதில் தோன்றிய காதலை நீ பார்த்து 
காற்றில் மிதந்து வரும் காகிதம் போல எண்ணி 
நாராக கிழித்து விட்டாயே 
கிழிந்தது காகிதம் அல்ல கிழிந்தது என் இதயமென்று 
பூங்காற்றே நீ அறிவாயா 
தேடி வந்த காதல் குறைவில்லை 
தேடிச்செல்லும் காதல் உயர்வில்லை 
மனிதரை போல இல்லை காதலில் ஜாதி இல்லையே 

நீ யாரோ எனக்கு  நான் யாரோ உனக்கு என்று 
உன் வார்த்தையால் என்னை கொன்றாயே 
பார்வை இழந்த சிற்பி  உளியால் கையை வெட்டி 
அடையும் துன்பம் நான் அடைந்தேனே 
கண்களை மூடும்போது கனவுகள் வரலாம் 
உன்னால் இங்கே கண்ணீர் வருகிறதே 

அன்பொன்று தோன்றிய பின்னே பிரிவென்று ஏதும் இல்லை 
என் காதலை தந்துவிட்டேன்  என் உயிரையும் கொன்றுவிட்டேன் 
வெறும் நிழலாக வாழுகிறேன் நியமாக்க நீ வருவாயா 
இல்லை புற்றுஉயிராக  என்னை பாதியில் விட்டு செல்வாயோ 

நிலவாக உன்னை காண்கிறேன் 
இருளிலும் ஒளியாக காண்கிறேன் 
இரவான என் வாழ்வை ஒளியேற்ற வேண்டுகிறேன் 
தீபமாக நீ வருவாயா  இல்லை இருளாக விட்டு செல்வாயா 
பூ ஒன்று பேசாவிடாலும் தென்றலின் காதல் ஒய்வதில்லை 
நீ என்னை மறந்தாலும் என் அன்பு மாறாது 
இறந்தாலும் இறக்காது  மரித்தாலும் மறக்காது .......

                                                   அன்புடன் அனு ......................

பூ முகம் பார்த்தேன்..........


என் விழிகளை தீண்டிய அவளின் கண்களின்
கரு வளயதையே சுற்றுகிறது என் உயிர் வளையம்
அந்த விழிகளின் பார்வை போதும்
மழைதுகள் இன்றி என் இதயம் குளிர்கிறது 
அவள் பார்க்கும் பொது
சில்லென்ற காற்று என் மேனியை
உரசி போவது போல
ஒவொரு நொடிகளிலும் உணர்வுகள் என்னை கொள்கின்றன..
காற்றாக மாறி அவளை சேரவேண்டும்
மூச்சு காற்றுபோல
அவள் உதடுகளையே வட்டம் இட வேண்டும்
அந்த பூ போல அவள் புனைகையிலும்
மென்மை உள்ளதை கண்டு கொண்டேன்
எந்தன் விழியன் கோபம் அவள் விழி மேலே
அவளின் காதல் பார்வை ,காந்தம் போல
என் விழிகளையே அவள் பக்கமாக கட்டிபோடுகிறது
கவிதை வரிகளை விட அவள் விழிகள் தான் நன்றாக கவிதை பேசுகிறது
                                                                                           அன்புடன் அனு ,,,,

புதன், 16 அக்டோபர், 2013

ஒவ்வொரு கணமும் உன்னை நினைத்து வாழும் வாழ்க்கையையே நான் விரும்புவது ,,,,

பேச்சு மூச்சு இரண்டும் இன்றி 
துரிகையுடன் ஓவியன் கொள்ளும் காதலைதான் 
மௌனத்தினால் உன்னோடு 
நான் கொள்ளும் காதலும் 
துரிகை தேய்ந்தாலும் ஓவியம் அழியாது 
நீ என்னை வெறுத்தாலும் 
என் அன்பு மாறாது ....
                             அன்புடன் அனு .......

வெள்ளி, 11 அக்டோபர், 2013

மௌனம் பேசுகிறதே ....

அன்பான வார்த்தைகள் வேண்டாம் 
ரகசியமாய் பேசும் பார்வைகள் வேண்டாம் 
அன்பினால் நிரம்பி வழியும் ஊடல் வேண்டாம் 
இருவரும் பக்கம் வேண்டாம் -இருப்பினும் 
காதலை காற்றாக சுவாசிப்பதால் ஏனோ 
நாம் காதலர்கள் ....
                                        அன்புடன் அனு .......

தூய அன்பு உண்மை நட்பு ....

இருண்ட வானின் கனமான துளிகளின் 
இதமான தூறல் நேரம் 
துளிகளில் தொலைந்த வண்ணம் நான் 
எதிரிலே குடையோடு என் நண்பன் 
குளிரிலே உறைந்து கொண்டிருந்தேன் நான் 
என்னை இறுக கட்டியணைத்தான் அவன் 
அவன் குடையோ என் கையில் 
குளிரான துளிகளோ அவன்  மேலே 
தான் மட்டும் நனைந்து வந்தான் என் நண்பன் 
இன்பம் பாதி எடுத்து கொள்ளுவான் 
என் துன்பம் முழுவதையும் பறித்து கொள்ளுவான் 
என்றுமே வெறுக்காத துய அன்புதான் நட்பு .......
                                                                 அன்புடன் அனு .......



ஊசலாடும் இதயமொன்று ...

உன்னோடு பேசும்போது  
உன்னோடு பேசாத நொடிகளை நினைத்தும் 
உன்னோடு பேசாதபோது
 உன்னோடு பேசிய நொடிகளை நினைத்தும் 
கவலையுடன் காலத்தினில் ஊசலடிகொண்டு செல்கிறது 
உன்னை நேசிக்கும் என் இதயம் ......
                                                          அன்புடன் அனு ......

கண்மணி வார்த்தை ஒன்று பேசாயோ ..

இந்த ஊமை காதலன் பேசும் மௌனம் புரியுமோ 
எந்தன் காதலும் உந்தன் கண்ணில் தோன்றுமோ 
நெஞ்சமே ...
உந்தன் மனதின் வேஷங்கள் கலையும் போதுதான் 
எந்தன் உயிரின் கதறல்கள் உந்தன் காதில் கேட்குமோ 
என்னை கொள்ளுதே உந்தன் மௌனமே என்றுமே நீ எந்தன் நெஞ்சிலே 
பேசடி வார்த்தை ஒன்று உன்னால் அழுவதோ நெஞ்சம் ஒன்று 
உள்ளத்தில் நீ இங்கு உன்னால் உருகிடும் நான் இங்கே 
கண்மணி ....
                                                 அன்புடன் அனு .....

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

அவள் ஒரு தேவதை


பெண்களில் கவிதையே நீதான் 
கவிஜர்களின் காதலியே நீதான் 
நான் கருத்தரித்த கனவும்  நீதான் 
நீ உருக்குலைத்த உயிரும் நான் தான் 

பூவாக பிறந்த பெண்மயிலே உன்னை  
காட்டு வழியோரம் தனிமையிலே கண்டேன் 
வண்டு வந்து உன்னை சுற்றும்  என்றெண்ணி 
என் விழிகளையே உன்னில் தொலைத்து விட்டு வந்தேன் 

கனவிலே உன்னை காண துயில் கொஞ்சம் கொண்டேன் 
நடு வானின் விண்மினி பறித்து அங்கே இருள் அகற்றிகொண்டேன் 
அருகில் வாழும் நொடிகளை வேண்டி  கதிரவனை விண்மினியாக்கி 
கனவினிலே தொடர்ந்திருக்க  காற்றெல்லாம் உறைந்திருக்க 
வழிமறித்தேன் காலத்தை உனக்காக   கனவினிலே நாம் வாழ்த்திடவே 

உன் பஞ்சான பாதம் மிதித்து தரை எல்லாம் பூவான கதை 
மலரெல்லாம் கேட்டு மலைத்து விட்டதே 
நீ தொட்ட தளிர்கள் எல்லாம் மலர்ந்து வண்டுகளின் இரையானதே 
உன் குரல் கேட்டு துயில் கொள்ளும் குயில்களிட்கெல்லாம் 
தாலாட்டு பாடும் தாயும் நீயல்லவா 
உன் இதழ் வழியே தாவிச்சென்ற உவர் நீரும் 
இனிமை என்று தேவர் பருகும் அமுதமல்லவா
உன் மேனியோடு அசை போட்டு வந்த புயலும் தென்றலல்லவா 
வெட்கமே தங்கும் உன் கண் இமையோரம் பார்த்து பூக்கள் சினுங்கவில்லையா  
புன்னகை தங்கும் உன் பூ இதழோரம் பனித்துளிகள் முத்தமிடவில்லைய 
தூய்மை  தங்கும் உன் மனதோரம் இறைவனின் இருபிடமல்லவா 
அழகோடு பூத்திருக்கும் உன் பெண்மை தேவதை வம்சமல்லவா 
நடைபோடும் தேவதையே மண்ணில் பிறந்த முதல் தேவதை நீயுமல்லவா 






புதன், 18 செப்டம்பர், 2013

உனக்காக ஓர் கடிதம்

மலரோடு பேசி வந்த தென்றல் 
நம் மூச்சோடு  உடலில்  கலப்பது போல 
உன்னோடு நான் கொண்ட காதல் 
நம் பேச்சோடு  என் உயிரில் கலந்து கொண்டது 

இரவை தேடி உன்கூந்தலை அடைந்து 
ஒளியைதேடி அதை  உன் கண்ககளில் கண்டுகொண்டேன் 
பூ இதழ்கள் செய்ய மென்மை தேடி 
உன் உடலை தெரிந்து கொண்டேன் 
சூரிய வெப்பம் என்வென்று அறிய 
மார்கழி இரவில் உன் தேகத்தை உரசிபார்த்தேன் 
சிப்பியில் விளையும் முத்துபோல 
உன் வியர்வை துளிகளை சேகரித்தேன் 
உடலில் கண்ட சிவப்பு ரத்தம் போல 
உயிரில் உள்ள சிவப்பு உன் கோபமென தெரிந்து கொண்டு 
தாயை போல பாசம் காட்டும் உன் மடியில் 
சிறு பிள்ளை போல வாழ பழகிகொண்டேன் 
பிறகும்போது அம்மா என்று அழுது வந்தேன் 
இறக்கும் போது உன் பெயரை கூறி சிரித்து செல்வேன் 

தேவதை என்று பலர் பலரை கூறி கேட்டதுண்டு 
என் உணர்வுகள் உன் பெயரை மட்டும் கூறி
பலதடவை உணர்ந்ததுண்டு
அழகின் தேவதை பலகோடி பூமியில் வாழலாம் 
என்றும் அன்பின் தேவதை நீ மட்டும் எனக்கு மட்டும்  
உன்னோடு  வாழ உயிர் துடிக்கிறதே 
உன் புன்னைகையில் என் இதயம் மெய்சிலிர்கிறதே 
உன் தேவதைமுகம் பார்த்து விடிய ஏங்கும் என் நாட்கள் 
உன்னோடு கைகோர்த்து பயணிக்க ஏங்கும் என் பாதை 
உனக்கு நான் என்னை தர நான் என்ன தவம் செய்தேனோ 
எனக்கு நீ உன்னை தர நான் என்ன தவம் செய்வேனோ
என் பூமியே நீயடி உன் வார்த்தையில் என் வாழ்வடி 
உன் தேவதை காலடி என் வாழ்கையின் விதியடி 
என் பூமியே எனோடு பேசடி உன் வார்த்தையால் துடிக்கட்டும் என் இதயமடி 
நீ என் காதலிற்கு சொந்த மானாய் அதனால் நான் மெழுகாக  உருகிறேன் 
உணர்வுகள் அற்று வாழ்கிறேன் உன்னால் 
உன்னை நினைத்து கரைந்தே போகிறேன் ...
கரைந்தே போகிறேன் கரைந்தே போகிறேன் 
தனிமை இன்னும் நீடித்தால் மறைந்தே போய்விடுவேன் 







ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

என்னை நினைத்துப்பார்

                     
                தொலைவாய் இருந்தாலும் 
                                தினம் தினம் 
                       ஒவ்வொரு கணமும் 
                      என்னை   நினைத்துபார் 
             தொலைவும் தொலைந்துபோகும் 
                        அதுதான் நம் காதல்